ஆண்டவர் சிலுவையில் உபதேசித்த மூன்றாம் வசனத்தை பார்ப்போம்

27/04/2017 12:32

சிலுவையையும் அதின் மகிமையையும் & மூன்றாம் வசனம்: முதலாவது...

சிலுவை பல பரிமாணங்களை பெற்றிருக்கிறது. சிலுவை என்றால் அவமானம், போராட்டம், அடிமை நிலை, துன்பம் தருவது என்ற நிலை என்று குற்றமற்ற இயேசுகிறிஸ்து அந்த சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தாரோ அன்றிலிருந்து அவருடைய விசுவாச மக்களாகிய நமக்கோ அவர் சிலுவையிலே

 a) பாவங்களை சுமந்திருக்கிறார் (ஏசா  53.12 , யோவான் 1:29),

b) அக்கிரமங்களை சுமந்திருக்கிறார் (ஏசா 53.11)

c) துக்கங்களை சுமந்திருக்கிறார் (ஏசா 53-4),

d) சாபங்களை சுமந்திருக்கிறார் (கலா  3-13),

e) பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நோய்களை சுமந்திருக்கிறார் ( மத் 8-17), என்பதால் கிறிஸ்துவானவர் சுமந்ததை இனி நீங்கள் வீணாக உங்கள் தலையிலே சுமந்து கொண்டடிருக்க தேவை இல்லை, அவைகளை கர்த்தர் மேல் இறக்கிவைத்துவிட்டு நீங்கள் இளைப்பாறுங்கள்.  I பேதுரு 5:7 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். சங்கீதம் 55 : 22. கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.   அதுபோல நமது வீட்டின் சுமைகளை கடவுள் பாதத்தில் இறக்கிவைத்துவிட்டு இலகுவாக இருங்கள்.

மூன்றாம் வசனம் .....யோவான்  19 :  26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.   27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய்  ற்றுக்கொண்டான்ஏ.

This statement(அறிக்கை) is traditionally called "The Word of Relationship"( வார்த்தை என்கிற உறவு. 
பொதுவாக மனித உறவுகள் அன்பால் கட்டுப்படுத்தப்படுகின்றன . 
பிதாவாகிய தேவன் தன் ஒரே குமாரனாகிய இயேசு கிருஸ்துவை எப்படி தான் நேசித்த இந்த உலகத்திற்கு ஒப்படைத்தாரோ 
அதைப்போலத்தான் தமது தாயையும் அவரிடம் அன்பாயிருந்த யோவானிடம் ஒப்படைத்தார் என கூறலாம். 
மூன்று நிலைகளில் தியானிக்கலாம் :  1) சோதனை 2) மனித அன்பு 3) தேவ அன்பு 

1.) முதாலாவது சோதனை: ஆண்டவராகிய இயேசு இந்த சிலுவை பாடுகள் வேதனையின் நேரத்தில்கூடத் தன்னுடைய தாயின் உலகபிரகாரமான எதிர்கால பராமரிப்பிற்குத் தேவையானதைச் செய்யும்படி யோவானிடத்தில் அவரை ஒப்படைத்தார்... இங்கே சோதனை எப்படி வருகிறது : ஆண்டவரை சாத்தான் பல சோதனைகள் மூலம் சோதித்தான் ஆனால் இயேசு வெற்றி பெற்றார்.  கடைசியாக சாத்தான் சிலுவையில் ஆண்டவர் வெற்றி பெறப்போகிறார் என்று இங்கேயும் சில முக்கியமான  ஆயுதங்களை உபயோகிக்கிறான். (மத்தேயு 27- 40, 41,.42,43.,44.தூசித்தனர், தூண்டிவிட்டனர், பரிகசித்தனர், ஏளனம் செய்தனர், கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். மாற்கு 15:32  )..இங்கே தேவ குமாரனை சோதிக்கும்படி அவரது தாயை உணர்வுபூர்வமாக (sentiment) சாத்தான் பயன்படுத்துகிறான். மீகா 7:6.....; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே.  மத்தேயு 10:36 ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. ஆனால் மத்தேயு 12-50 : பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். லூக்கா 8–21 : தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.  அப்படியென்றால் இப்பொழுது அவரது தாயாரை உதாசீனபடுத்துவார் என்று சாத்தான் நினைத்தான்.  ஆனால் என்ன நடந்தது அவர் கடவுளின் கட்டளையான உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாகஎன்றபடி தன் தாயை  பராமரிக்கும்படி யோவானிடத்தில் ஒப்படைத்தார். இதன் மூலம் பிதாவின் கற்பனைகளை கைக்கொள்ள தவறவில்லை என்பதையும், சாத்தானை ஜெயித்துவிட்டார் என்றும் பார்க்கலாம்.  ( யாத்திராகமம் 20:12 , உபாகமம் 5:16 , மத்தேயு 15:4 , மத்தேயு 19:19   மாற்கு 7:10 , லூக்கா 18:20, எபேசியர் 6:3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது)  நம்முடைய பெற்றோரைக் எந்த நிலையிலும் கனப்படுத்த வேண்டும் என்பதையும் (I பேதுரு 5:8 .)   மேலும் எந்த நேரத்திலும் சாத்தான் எவனை விலுங்கலாமோ என்று கர்ச்சிக்கிற சிங்கம் போல் வலை வீசித்திரிகிறான் என்பதிலும் நாம் அதிக கவனமாக இருக்கவேண்டும் பிரியமானவர்களே. நாம் தேவனுடைய பரிசுத்த ஆவியை பெற்றால்தான் இந்தமாதிரி சோதனைகளை மேற்கொள்ள முடியும்.  அதற்கு முதலில் நாம் பரிசுத்தமாய் ஆக வேண்டும். பரிசுத்தமாக மாறவேண்டுமானால், மாம்ச சிந்தைகளை, மாம்ச கிரியைகளை, அக்கிரம செய்கைகளை விட்டு விடவேண்டும். 1 கொரிந்தியர் 3: 16&17.; நீங்களே அந்த ஆலயம்(தேவனுடை ஆலயமாகிய நமது உள்ளதை மற்றும் சரீரத்தை பரிசுத்தமாக வைப்பது நமது கடமை)

மேலும் இங்கே ஆண்டவர் கடைசி சோதனையாக மரணம் என்னும் இந்த கண்ணியிலும் வெற்றி பெற்றுவிட்டார். இதை வேதம் சொல்லுகிறது I கொரிந்தியர் 15:26 பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம். ஆமாம் நம் ஆண்டவர் மூன்றாம் நாள் தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்...மரணத்தை வென்றார்...(.மத்தேயு 28:6 ..ரோமர் 6:9  ரோமர் 14:9  I கொரிந்தியர் 15- 17)

அருமையானவர்களே, வெற்றி வீரராக சாத்தானின் அதிகாரமெல்லாம் நம் ஆண்டவர் பறித்துக்கொண்டார் தனது காலாலே மிதித்து அவைகளை சிலுவையில் அறைந்துவிட்டார்......ஆமென்..

“சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்

சிலுவையில் அறைந்துவிட்டார் இயேசு காலாலே மிதித்துவிட்டார் ....... கிறிஸ்துவுக்குள்”

 

 

2.)-----இரண்டாவதாக மனித அன்பு/குடும்ப அன்பு : இந்த வசனத்தின்படி இங்கே இயேசுவும் அன்பு செலுத்தினார், தாயும், சீடனும் இயேசுவிடம் அன்பு செலுத்தினார்கள் (Reciprocation of love)...ஆனால் இந்த உலகம் அவரை அறியவில்லை. மாறாக இகழ்ந்தது, பலித்தது, அவமானமாக நினைத்தது, , ஆனால் அவரோ இந்த உலகத்தில் அன்பு வைத்ததினால்தான் குற்றமில்லாத அவர் தன்னை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அதாவது பிதாவாகிய தேவனின் சித்தத்திற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார்.

மரியாள் அல்லது தாயன்பு கன்னிமரியாள் பின் தாயாகி எல்லா காரியங்களையும் தேவன் அவருக்கு தேவதூதன்மூலம் கூறியது போல் செய்தார். இயேசு பிறப்பதற்கு முன்னரே, இவர் உலக இரட்சகர் என்பதை (லூக்கா 1-30&31. இதோ, நீ கர்ப்பவதியாகி .. அவருக்கு  இயேசு என்று பேரிடுவாயாக.)  சிலுவையின் கோர மரணத்தின் மூலமாகத்தான் இவர் உலகத்தை இரட்சிப்பார் என்பதை சிமியோன் என்னும் பரிசுத்தவான் லூக்கா 2-35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் , “என்று தீர்க்கதரிசனமாக தாயாகிய மரியாளுக்கு அறிவித்திருந்தான். இவற்றை எல்லாம் அறிந்தவராகத்தான் மரியாள் இயேசுவின் சிலுவையின் அருகில் இருக்கிறார். ஆகவேதான் அவர் மார்பில் அடித்துக்கொண்டோ, ஓலமிட்டோ, ஒப்பாரி வைத்தோ அழவில்லை.    நாம் வேதத்தில் பார்ப்போமென்றால் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீது தன்னை அரசனாக்கும் என கேட்கவில்லை, அடிமையாய் விற்க்கப்பட்ட யோசேப்பு தான் அதிகாரியாக யாரிடமும் கேட்கவில்லை, சிங்க கெபியில் எறியப்பட்ட தானியேல் தன்னை காப்பாற்ற யாரிடமும் கேட்கவோ, கத்தவோ, கதறவோ இல்லை & இங்கே மரியாள் தன்னை கவனிக்க ஒரு மகன் கிடைப்பான் என எதிர் பார்க்கவும் இல்லை... .. பிரசங்கி 3:11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்..என விசுவாசிக்கவேண்டும்.. மத்தேயு 6:8 ...; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.   எபேசியர் 3:20 நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும்  மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, ரோமர் 8:26  .......நமக்காக வேண்டுதல்செய்கிறார். ..... நாம் அவருடைய சிலுவையின் அண்டையில் விசுவாசத்துடன் சென்றாலே போதும்..     (எபிரெயர் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்;................ விசுவாசிக்கவேண்டும்)
யோவான் 11:40 : இயேசு சொன்னார்: “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.

 

தனது கண் எதிரே குற்றமில்லாத தனது மகன் சிலுவையில் இரத்தம் சிந்துவதை ஒரு உலக பிரகாரமான தாயால் எப்படி தாங்க முடியும். அதனால் அவர் மிகுந்த வியாகுலமும், மனஅழுத்தமும், சஞ்சலமும் துக்கம் நிறைந்தவராய் சிலுவையின் அருகில் நின்றுகொண்டு இருந்தாள். அதை ஆண்டவர் காண்கிறார், அதற்கு பதில் அளிக்கிறார்.எந்த நிலைமையிலே சிலுவை அண்டையில் வந்தாலும் ஆண்டவர் அதை பார்த்து பதில் தருகிறவராய் இருக்கிறார்.. இந்த உலகத்தில் ஆண்டவரிடம் யார் மிகவும் அதிகம் அன்பாய் இருக்கிறார்களே, அவர்களுக்கு அதிக பாடு இருக்கும், துன்பம் அனுபவிக்கவேண்டியிருக்கும்.ஆமென்....  யோவான் 16:33 சொல்லுகிறது....உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.    “Prosperity Christianity” …. யாக்கோபு 1:12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்...


இப்படித்தான் 1996ம் வருடம் டிசம்பர்  எனது வாழ்விலும் ஒரு போராட்டம். எனது மகள் தனது எட்டாவது மாதத்தில் மரித்துவிட்டார் என மூன்று மருத்துவர்கள் சொன்ன சுமார் ஏழு மணி நேரம் கழித்து மறுபடியும் உயிர் வந்தது......லாசருவை, யவீருவின் மகளை ஊயிரோடு எழுப்பின ஆண்டவர் இன்றும் அற்புதம் செய்கிறார் ....ஆமென்...அல்லேலூயா.   ஏசாயா 53 : 4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்ஏசாயா 53 : 5. நம்முடைய மீறுதல்களினிமித்தம்.....; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.    I பேதுரு 2:24 .....நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். . எபிரெயர் 12:6 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார். நீதிமொழிகள் 3:12 தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

அருமையானவர்களே, ஆண்டவரை முழுவதும் நம்பி விசுவாசத்துடன் பொறுமையாக மரியாளை போல அவரிடம் அன்பாய் இருந்தால் மட்டும் போதும் நீங்கள் இந்த உலக போராட்டத்திற்கு ஓலமிட்டு, ஒப்பாரி வைக்க வேண்டியதில்லை.

இந்த அன்பை நாம் எப்படி நமது குடும்பத்திலே காண்பிக்க முடியும்:    மரியாள் தனது மகனின் இந்த கொடூரமான வேதனையின் மத்தியிலும் விசுவாசத்தோடு பொறுமையாக அவர் பாதத்தில் அமர்ந்து இயேசுவையே நோக்கிப்பார்க்கிறாள். அப்பொழுதுதான் ஆண்டவர் அவரின் உள்ளத்தில் உள்ளத்தை புரிந்துகொண்டு உதவி செய்கிறார்.. என்றைக்குமே பிள்ளைகள் வளர்ப்பில் முக்கிய பங்கு வகிப்பது அவரது தாய் என்றால் அது மிகையாகாது.  ..நீங்கள் உங்கள்  குழந்தைகளை புரிந்துகொள்ளுவதற்கு முன் முதலாவதாக தேவனுடைய சமுகத்தை நோக்கி பாருங்கள், பிறகு அவர்கள் உங்களை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பொதுவாக குழந்தைகளுக்கு பெற்றோர் ஒரு முன் ஊதாரணமாக (A real life HERO or HEROIN) இருக்கவேண்டும்  அவர்களுக்கு முன் மாதிரியாக நடக்கவேண்டும். குழந்தைகளுக்கு முன்னால் பாவம் செய்பவர்கள் இரண்டு மடங்கு பாவம் செய்கிறார்கள்என்பதை புரிந்துகொள்ளுங்கள்..       கணவரோ, மனைவியோ, பிள்ளைகளோ எப்படி பட்டவர்களானாலும் பரவாயில்லை, மிகவும் பொறுமையாக மரியாளை போல ஆண்டவரே, நீர் எனக்கு தந்த நல்ல மனைவிக்காக, கணவருக்காக, பிள்ளைக்காக, நல்ல மாமியாருக்காக என குடும்பஜெபத்தில் ஜெபம் செய்யவேண்டும்...

பிள்ளைகள் தானாக வளர முடியாது அவர்களுக்கு பெற்றோர்தான் முதலில் சொல்லித்தரவேண்டும்.. தேவன் கொடுத்திருக்கும் இப்பொறுப்பிற்கு பெற்றோர் தேவனுக்கு முன் கணக்கு கொடுக்க வேண்டும் என்ற உண்மையையும் நீங்கள்ள் உணர வேண்டும். பணம் வேண்டும். வாழ்க்கையில் வசதி வேண்டும் என்பதற்காக தங்கள் பிள்ளைகளை பூனைக்குட்டிகளைப் போல் விருப்பம்போல் எப்படிவேண்டுமானாலும் வளரவிடுவது கிறிஸ்தவப் பெற்றோர்கள் செய்யும் காரியமல்ல. ஊதாரணமாக பிள்ளைகள் ஆலயத்திற்கு வரும் போது பைபிள் கொண்டுவருவதை போல, பெண் பிள்ளைகள் முக்காடு போடுவது நல்லது.I கொரிந்தியர் 11- 4-16 (5... சங்கீதம் 127: 4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.  சங்கீதம் 127:5 வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.    ஆக அவர்களை சரியான விதத்தில் பயன் படுத்த வேண்டும். நீங்கள் அவர்களை சரியான வழியில் நடத்தவில்லை என்றால் உலகம் அவர்களை தன் வழியில் நடத்திவிடும்.  எபேசி. 6:4, நீதி. 22 :6,நீதி. 13: 24, நீதி. 29:15 - பிரம்பை கையாடாதவன் தன் மகனை பகைக்கிறான். The rod and reproof give wisdom: but a child left to himself bringeth his mother to shame.  பிள்ளைகளை கண்டிக்காமல் விடுவதும் தவறு அதிகம் கண்டிப்பதும் தவறு.......

   தனிநபர் ஒழுக்கம் முக்கியமாக கிருஸ்தவர்களுக்கு அவசியம்,  ஒரு கிருஸ்தவ விசுவாசி தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் மற்ற அவிசுவாசிகளுக்கு உதாரணமாக இருக்கவேண்டும் ஆனால் இப்பொழுது எப்படி இருக்கிறது என்றால் பல TV Channelகள்  முக்கியமாக கிருஸ்தவர்கள் செய்யும் அநியாயங்கள் மற்றும் அந்தரங்க அசிங்கங்களை வெளியரங்கமாக விவாதிக்கின்றனர்சிலுவையின் அருகில் இருந்த மரியாளை அங்கு இருந்தவர்கள் உற்று நோக்கி பார்த்துக்கொண்டு இருந்தது போலத்தான் உலகம் நம்மை அதிகம் உற்று பார்க்கிறது.  தினசரி பேப்பரை தினசரி பேப்பரை எடுத்தால் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், லஞ்சம், மோசடி அதில் ஒருவர் கிருஸ்தவ பெயரை உடையவராக இருக்கிறார்?  நான் கிறிஸ்தவ பெயரை ஊடையவனா, அல்லது கிருஸ்துவை உடையவரா?   கிறிஸ்தவராகிய நமது நடை, உடை, சொல், செயல், பாவனை மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும், இடறல் உண்டாக்குவதாக இருக்கக்கூடாது.  The non Christian world first reads Christians, not the Bible.   Mahatma Gandhi-“I like your Christ; I do not like your Christians. Your Christians are so unlike your Christ.”   “Actions speak louder than words”. This implies that it is not just enough to say “I am a Christian”. “By our way of life, people should be able to say: “this is a follower of Christ”. Jesus himself insists that people will be known by their fruits (Mtt 7: 15-20). The word Christian means follower of Christ or being like Christ. In other words, a Christian is one whose life is based on the teachings of Christ.    ரோமர் 14:21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது,  தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால்,  அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும். I கொரிந்தியர் 8:13 ....

பெற்றோர்களே நீங்கள் உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும், நன்றாக வேலைக்கு போய் நன்றாக சம்பாதிக்கவேண்டும் என நினைப்பது தவறன்று, ஆனால் உங்கள் பிள்ளைகள் நன்றாய் இருப்பது நீங்கள் செய்யும் அனுதின தனி மற்றும் குடும்ப ஜெபமும், அனுதின வேதவாசிப்பும், தசமபாகம் அல்லது முடிந்தவரை காணிக்கை கொடுப்பதும், வேண்டியவர்க்கு உதவுவது, ஒழுங்காக ஆலயம் செல்வதும், வரவுக்கு ஏற்ற செலவு செய்வதும் போன்ற முன்மாதிரியான வாழ்க்கையும் தான் என்பதை மறக்கவே கூடாது, மேலும் உங்கள் பிள்ளைகள் கஷ்டம் தெரியாமல் வளர்ப்பது தவறல்ல ஆனால் உங்கள் உழைப்பு தெரியாமல் வளர்க்கவேண்டாம்.(FB)”.

நான் ஒருநாள் எனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்ற போது..தனது மகன் என்ன செய்துகொண்டிருந்தான் என தெரியாமல் அவன் இருந்ததை எண்ணி வருத்தப்பட்டேன்........இவ்விதமாக நமது பிள்ளைகளை நாம் எவ்வாறு கவனிக்கிறோம் என தெரியாமலேயே இருக்கிறோம ஆனால் உங்கள் பிள்ளைகள்? நம்புவது நல்லது ஆனால் கண்காணிப்பது மிகவும் நல்லது குறிப்பிட்ட காலம் வரை.  முக்கியமாக நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் எவ்வளவு தரமான நேரம்(quality time) செலவழிக்கின்றீர்கள். அவர்கள் பேச்சுக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம்.  அருமையான பெற்றோரே,  மரியாளை போல விசுவாசத்துடன் பொறுமையாக சிலுவையின் அடியில்  உங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள்  நடுத்தர வயது பெற்றோரே, உங்கள் குழந்தைக்கு எவ்வளவு நேரம் செலவிடவேண்டுமோ அதோபோல் இப்பொழுது உங்களது வயதான பெற்றோருக்கும் நேரம் செலவிடுங்கள், அதுதான் )BONDAGE OF LOVE IN FAMILY( குடும்பத்தில் அன்பின் பிணைப்பு

யோவானின்அன்பு அல்லது சகோதர அன்பு பன்னிரண்டு சீடரில் யோவான் ஒருவன் தான் சிலுவைவரை வந்தவன். துக்கத்துடன் இருந்த மரியாளை ஏக்கத்துடன் இருந்த சீடன் யோவானிடம் ஒப்படைக்கிறார் அவனும் அதை முழுமனதுடன ஏற்றுக்கொன்கிறான். அவருடைய சீடனாய் இருக்க விரும்பினால் என்ன செய்யவேண்டும் : லூக்கா 14:27 & மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன்   உண்மையாக ஆண்டவரை பின்பற்றுகிறவன் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என வேதம் தெளிவாக சொல்லுகிறது.    யோவான் மற்ற சீடர்களை போல் பயந்து  ஒடாமல், அல்லது பேதுருபோல் மறுதலியாமல், அல்லது யூதாசை போல் தற்கொலை செய்யாமல், அவரை கடைசிவரை பின் பற்றி வந்தான்   ...அது தான் கிருஸ்தவ வாழ்க்கை... என்ன துன்பம் வந்தாலும் நாம் ஆண்டவரை விடவே கூடாது...செய்வோமா?....

என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்

யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் ...........கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு……….

 

அருமையான கிருஸ்தவ விசுவாசிகளே, யோவான் தனது சீடனின் கடமையை ஆண்டவர் சொல்லியபடி சரியாக செய்தான் என்று பார்க்கிறோம்.  நம் கண்முன்னே கஷ்டப்படும் நமது சகோதர சகோதரிகளுக்கு ஆண்டவர் விரும்புகிறபடி உதவி செய்கிறோமா?         "நீதியரசர் ஜான் மைக்கேல் டி குன்ஹா.. (FB)    "ஏழைகள் எந்த மதத்தை , ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களுக்கு உதவாதவனும், அநீதிக்கு எதிராகப் போராடாதவனும் தூய்மையான கிறிஸ்தவன் அல்ல"        நான் எப்படி உதவுகிறேன்?  சற்று சிந்திப்போம் அருமையானவர்களே.

 

அருமையானவர்களே......இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி ...சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள Katholi என்ற கிராமத்தில் வசித்து வந்த மனம் மாறின பல அழகான கிருஸ்தவ குடும்பங்கள் சமீபத்தில் இந்த கொடுமையான சூழ்நிலையை கடந்து வந்தது. இவர்களை ஊரின் நடுவே அழைத்து வந்து அவர்களை சிலைக்கு பூசை செய்து வழிபட வற்புறுத்தினர். ஆனால் அதில் 8 குடும்பங்களை சார்ந்த 27 பேர்கள் மட்டும் மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் பெண்களையும் குழந்தைகளையும் கூட கடுமையாக தாக்கினர்.     தாய் மதத்திற்கு திரும்புங்கள் என கூறினர் (Ghar Vapsi or home coming) ....மேலும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து நான்கு நாள் கழித்து சில ஊர் பெரியவர்களின் தலையீட்டின் காரணமாக அவர்கள் திரும்பவும் ஊருக்குள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் வீடுகள் சூறையாடப்பட்டு உடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அவர்கள் ஆண்டவரே தெய்வம் என விடாமல் இருந்தனர்..

I யோவான் 3:18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். I பேதுரு 4:16 ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். .... எவ்வளவு போராட்டம் வந்தாலும் கடவுளுக்காக வைராக்கியமாக இருக்கவேண்டும் என்றால் தேவ அன்பு நம்மை ஆட்கொள்ளவேண்டும்.  அருமையானவர்களே ஆண்டவருக்காக கஷ்டங்களை எதிர்கொள்ள ஆயத்தமா? 

பொதுவான மனிதனின் அன்பு எப்படி பட்டது என்பது பற்றி ஒரு கதை .......ஒருநாள் ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.   அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.   அவரது மனைவி, 10 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர். இந்தக் குடுமபத்துக்கே போதகராக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார். அவரின் ஜெபம்மூலம் அநேக அற்புதங்கள் நடந்தன... அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!    இறந்தவரின் மனைவி சொன்னாள்..  ஐயா”! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..?  நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..!      போதகர் அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை... கடைசியில் அவர் கேட்டார்.       ”ஒரு டம்ப்ளர் தண்ணீர் கொண்டு வாருங்கள்”  தண்ணீர் வந்தது. அவர் டம்ளரை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.   பின் சொன்னார்..  ”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.   இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!     அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.      போதகர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்”    ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?” உங்களுக்குதான் வயது ஆகிவிட்டதே என்றார்.  தந்தை சொன்னார்  ”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்”    தாயைக் கேட்க அவள் சொன்னாள்   ”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?”  மனைவி சொன்னாள் ”நான் இறந்தால் என் ஒரே பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்”  போதகர் பையனைப் பார்த்துக்கேட்டார்.    ”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?” அப்பொழுது என்ன நடந்திருக்கும்........... அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்.     ”போதகரே, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன்ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?”……       போதகர் சொன்னார்... உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.  அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவரை எடுத்துக் கொண்டார் ...உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம் பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான அல்லது துக்கமான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”.    இதுதான் மனித அன்பு.... மனிதர் எனக்கு காட்டிடும் பாசம் யாவும் நினையாத நேரத்தில் நீர்க்குமிழ் போல் மாறும். இதயம் நொறுங்கும் வேதனையாய் ஓர் நாள் மாறும்..

இயேசு தனது முதல் ஊழியத்திலும் & கடைசி ஊழியத்திலும் இயேசுவானவரும் தாயாகிய மரியாளும் அருகில் இருக்கிறார்கள் அதாவது ஒரு (Evangelist) ஊழியனாக இயேசு இருக்கும் போது.  ஆகவேதான் ஸ்திரியே என்று இரண்டு இடங்களிலும் கூறுகிறார்.  மத்தேயு 10:37  தகப்பனையாவது  தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல,. என்று சொன்னவர் செய்தும் காட்டினார்.

3.)....தேவ அன்பு : God’s Love:  தேவ அன்பைக்குறித்து நிறைய காரியங்கள் இருந்தாலும், சிலவற்றை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.   நமது ஆண்டவர் சிலுவையில் சொன்ன ஏழு வசனங்களில் முதல் மூன்று வசனங்களை பார்ப்போ மென்றால் மனிதர்கள் மீதுள்ள அன்பின் நிமித்தமாக மனிதர்களுக்காக பேசியவைகள் அதிலும் இந்த வசனத்தை ஆண்டவர் சிலுவையில் தொங்கிய போது சொன்ன ஒரு அன்பின் வார்த்தை மற்றும் மனிதர்களுக்காக பேசிய last public ministry(கடைசி பொது ஊழியம்) என்றே கூறலாம்..... மனிதர்களின் அன்பு "காரணங்களை அல்லது நிபந்தனைகளை" அடிப்படையாகக் கொண்டு உள்ளது (conditional love). ஆனால் தேவனுடைய அன்பு மட்டுமே நிபந்தனையற்றது (Unconditional love) உண்மையானது . நாம் கறுப்போ, சிகப்போ,குட்டையோ நெட்டையோ, ஏழையோ பணக்காரனோ, படித்தவனோ படிக்காதவனோ .....மனித அன்பு இந்த உலகத்தில் மட்டுமே, ஆனால் தேவ அன்பு இந்த உலககத்திலும், வின்னுலகதிலும் உண்டு.

I யோவான் 3:16 அவர் (இயேசு) தம்முடைய ஜீவனை (பாவிகளாகிய) நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம் ;…இதுதான் பிரதானமான அன்பு... .. அந்த அளவு இந்த உலக மனிதர்கள் எல்லார் பெயரிலும் அதிக அன்பு வைத்துள்ளது தெரிகிறது.     ரோமர் 5- 8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்.  ,   யோவான் 3-16 &17........

மனிதன் தேவனிடத்தில் அன்புகூறும்போது : ரோமர் 8:28  அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.   

தேவன் நம்மீது அன்புகூறும்போது  : ரோமர் 8:  36. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? 37  இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே (33–36)மனித அன்பும் தேவ அன்பும் ஒன்றுபடும் போதுதான் மனிதனின் வாழ்வு முழுவெற்றியாகும், மகிமையாகும், நம்பிக்கை மிக்கதாகும், விடுதலை உள்ளதாகவும், மாட்சிமை உள்ளதாகவும், ஜெயம் கொள்ளுகிரதுமாக மாறும்.

I யோவான்  4 11-12 .... நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். 20. தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?  21. தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.  

Christ Jesus died on the Cross to redeem mankind, to save us from our sins because of his love for us. அருமையானவர்களே நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மேல் வைத்த அன்பின் நிமித்தமாக, இந்த மனுகுலத்தை மீட்கவும், பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்கவுமே சிலுவையில் பலியானார்.”

I யோவான் 5:3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; .......  II யோவான் 1:6 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; ...... I யோவான் 2:5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.  .I யோவான் 5:2 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.    

கற்பனைகள்=தேவ அன்பு:: I யோவான் 5:2, I யோவான் 5:3, II யோவான் 1:6, I யோவான் 2:5,

நியாயப்பிரமாணம்= கற்பனைகள் : கலாத்தியர் 5: 14 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்I யோவான் 3 - 4. பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். ரோமர் 7:7 ... நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி ....கலாத்தியர் 5: 14, I யோவான் 3 -4. , ரோமர் 7:7  மத்தேயு 22: 37, யோவான் 1:17, கலாத்தியர் 3:24, I தீமோத்தேயு 1- 8-11...... ( மத்தேயு 22: 37 - யோவான் 1:17.    கலாத்தியர் 3:24,. I தீமோத்தேயு 1- 8..9.,10 11.....
கற்பனைகள்: மத்தேயு 5 முழுவதும்...ஆவியில் எளிமையுள்ளவர்கள்...... 19. ஆகையால், இந்தக் கற்பனைகள்..

பரிசுத்த ஆவி : 1 கொரிந்தியர் 3: 16., நீங்களே அந்த ஆலயம்ரோமர் 5:5  நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை (தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கை) நம்மை வெட்கப்படுத்தாது........தேவ அன்பானது பரிசுத்த ஆவியினாலே நம்முடைய இருதயத்தில் நிரப்பினால் ஒழிய நாம் பரிபூரணமடைய முடியாது.  ஆகவே அன்பானவர்களே இந்த பரிசுத்த ஆவியை பெற்றவர்களாக நாம் வாழவேண்டும் அப்பொழுதுதான் ஜெயம் பெற்றவர்களாக மாற முடியும்...

கடைசியாக ஊழியம்: யோவான் 21:16 ...: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். யோவான் 21:17.... இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.  அவரிடம் அன்பாயிருப்பது என்னவென்றால், அவருக்கு ஊழியம் செய்வதாகும் அவருக்காக ஆத்துமாக்களை ஆதாயம்செய்யவேண்டும்.

லூக்கா 11-42. பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே.

ஆனால்..நம்மில் ஏன் அன்பு தனிந்துபோகிறதுமத்தேயு 24:12  அக்கிரமம் (மாம்சத்தின் கிரியைகள்) மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.       மாம்சத்தின் கிரியைகள் (பாவம்)  கலாத்தியர்  5-  16, 17. கலாத்தியர்  5 : 19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாய் இருக்கின்றனஅவையாவன: விபசாரம்,........22. ஆவியின் கனியோ, அன்பு, ........., இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம்(தேவனுடைய கற்பனைகள்) ஒன்றுமில்லை 24. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

அருமையானவர்களே நாம் தேவ அன்பை பெறவேண்டுமானால் முதலில் இரட்சிக்கப்பட்டு இயேசுவின் பிள்ளையாய் மாறவேண்டும் அதற்கு சிலுவையின் அடியில் வரவேண்டும்., பிறகு அவரின் கற்பனைகளை, பிரமாணங்களை கைக்கொள்ளவேண்டும் அதற்கு சிலுவையை சுமக்க வேண்டும்  அதற்கு தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில்  அறைய வேண்டும், பிறகு பரிசுத்த ஆவியை பெறவேண்டும், கடைசியாக அவருக்காக ஆத்துமாக்களை ஆதாயம்செய்யவேண்டும்.  அப்பொழுதுதான் தேவனிடத்தில் அன்பாயிருக்கிறோம் என பொருள் படும்.

லூக்கா 11:23  , மத்தேயு 12:30 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.

அருமையான சகோதரனே, சகோதரியே....உனக்காக இயேசு இந்த சிலுவை பாடுகளைப் பட்டார்...ஒரு நிமிஷம் அந்த கல்வாரி அன்பை நம் கண் முன் கொண்டு வருவோமா?....

உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் -2....   இயேசு கிறிஸ்துவின் அன்பு   
            அருமையான சகோதரனே, சகோதரியே, ஒருவேளை மரியாளை போல உடைந்த உள்ளத்தோடே இந்த நேரத்தில் வேதனைகளிலும், வியாதியிலும், பாடுகளிலும் மத்தியில் இருக்கிறீர்களா, இயேசுவின் சிலுவை அண்டையில் வாருங்கள். எல்லாரையும் நேசிக்கும் நிபந்தனையற்ற அன்பின் ஆண்டவர் உங்கள் பாவங்களை நீக்கி உங்களை அவருடைய சொந்த மகளாக, மகனாக மாற்றுவார்.....பாவி என்று அவர் உன்னை தள்ளிவிடவே மாட்டார்....

பாவி என்றுன்னை இயேசு தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இதோ அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவை சொந்தம் கொள்ள வா-2.....      இயேசு கிறிஸ்துவின் அன்பு

எங்களை அதிகமாக நேசித்து வழிநடத்திவருகிற அன்பின் பரமபிதாவே, எப்பொழுதும் நாங்கள் உம்முடைய குமாரனாகிய  இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக இருக்கவும்,  நீர் எங்களுக்கு அருளிய தேவ அன்பை பெற்றவர்களாய் மரியாளை போல, யோவான் சீடன் போல எந்த சூழ்நிலையிலும் உம்மை விடாமல் வாழவும்  கிருபை செய்ய வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன் எங்கள் அருமை பிதாவே ! ஆமென்..... 

------

தேவ அன்பு:  I யோவான் 3:16, ரோமர் 5- 8.   I யோவான் 3:17, .    I தீமோத்தேயு 1:15, எபேசியர் 5: 2, I யோவான் 4:8, I யோவான் 4:16, யோவான் 3-16 &17, I யோவான்  4 11&12, 20 & 21 ----à

 (.I யோவான் 3:17 ஒருவன்....., தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி.    I தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.......எபேசியர் 5: 2. கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள் I யோவான் 4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (GOD IS LOVE). I யோவான் 4:16 .....தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.  யோவான் 3-16. ....இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.  17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.    ரோமர் 13:10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.)

 

---

இந்த செய்தி எனது தென் இந்திய திருச்சபை பசுமலை ஆலயத்தில் நான் 14.04.2017 பெரிய வெள்ளி அன்று பகிர்ந்து கொண்டது.