கேள்வி

What is the Emergency number in Bible ?

பதில் : Jeremiah 33:3 

“Call to me and I will answer you and tell you great and unsearchable things you do not know.” Jeremiah 33:3 

எரேமியா 33-3 கரத்தர் சொல்லுகிறார், என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.  ஆமென்...

கேள்வி

Q-1. குறையும் கணவரின் குடும்ப நேரம்

 

எங்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றது. இரண்டு குழந்தைகள். நல்ல  உத்தியோகத்தில் என் கணவர், பார்ட் டைம் ஜாப்பில் நான்,என எங்களது வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. என் கணவர் ஊழியங்களிலும் பயங்கர ஈடுபாடு. 1 அல்லது 2 மணி நேரம் ஒரு நாளைக்கு குடும்பத்திற்கென்று செலவழித்தாலே பெரிது. இதற்கிடையில், நான் மேலே படிக்க போகின்றேன் என்று சொல்லிக் கொண்டிருகின்றார். அப்படி போனால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவது அவரால் முடியாமல் போய்விடும். அவரிடம் என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை.

உங்கள் ஆலோசனைக்காக எதிர்பார்க்கும், எஸ்தர் சுந்தரி லோகச்சந்தர், திருநிறையூர்.

பதில்

A-1 அன்புள்ள சகோதரிக்கு,

அன்பின் மொழிகள் ஐந்து உள்ளது. அதாவது அன்பை வெளிப்படுத்தும் முறைகள். உங்கள் அன்பின் மொழி “தரமான நேரத்தை ஒதுக்குவது” என்று நினைக்கின்றேன்.

உங்கள் கணவர் வேலைக்கும்,  ஊழியத்திற்கும் நேரத்தை செலவழிக்கிறார். ஆனால் என்னுடனோ ,  பிள்ளைகளுடனோ நேரத்தை செலவழிப்பதில்லை என்பது உங்கள் குற்றச்சாட்டு.

1. உங்கள் கணவர் மாத்திரம் அல்ல ,  அநேக ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு ஒரு வேலையை செய்து முடிப்பது ஒருவித திருப்பதியைத் தரும்.

2. அவர் ,  என் மனைவி,  பிள்ளைகளுக்குத் தேவையானதை எல்லாம் வாங்கி கொடுப்பது,  குடும்பத்துக்காக உழைப்பதுதான் அன்பு என்று நினைக்கின்றார். நீங்கள் உங்களுடன் நேரம் செலவழிப்பது தான் அன்பு என்று நினைக்கின்றீர்கள்.

3. உங்கள் பிரச்சனை புரிந்து கொள்ளுதலின் பிரச்சனையே தவிர ,  அன்பு பிரச்சனை அல்ல. அவர் உங்களை நேசிக்கிறார்.

4. நீங்கள் அவரிடம் மனம் திறந்துப் பேசுங்கள். அவர் உங்களுடன் நேரம் செலவழிக்கும் போது அது உங்களுக்கு எவ்வளவு மகிழ்சியையும்,  திருப்தியையும்  தருகிறது என்பதை பொறுமையாக விளக்குங்கள்.

5. அவர் படிப்பதற்கு அனுமதியுங்கள். ஆனால் சில நிபந்தனைகளை முன் வையுங்கள். ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகளோ அல்லது வாரத்தில் ஒரு நாளோ ( அது எந்த நாள் என்று தீர்மானிக்க வேண்டும்)  குடும்பத்துக்காக ஒதுக்கச் சொல்லுங்கள். “ குடும்ப நேரம்” என்பது மிகவும் முக்கியமானது.

6. அவர் அதை புரிந்துக் கொண்டு மாறும் வரை பொறுமையாக இருங்கள்.  சண்டை போடாதீர்கள். அவருக்காக ஜெபியுங்கள்.

7. முடிந்தால் அவருடன் ஊழியத்திற்கு செல்லுங்கள். அதுவும் அவருடன் நீங்கள் செலவு செய்யும் நேரமாக இருக்கலாமே. 

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

உங்கள் சகோதரி

Question & Answer

இந்தியாவில் மனஅழுத்தம் அதிகமானதற்கு காரணம் என்ன?
 
1. சுயமாக சிந்திக்க அதிக வருடம் ஆகிறது.  
2. கூட்டுக் குடும்பம், குடும்ப கலாசாரம் ஒரு காரணம் - கட்டுப்பாடு என்ற இறுக்கம் 
3. ஜாதி பிரிவினைகள், மத பிரிவினைகள் ஒரு முக்கிய காரணம், நகரத்துக்கும் Vs கிராமத்திற்கும் இடையே பெரிய இடைவெளி 
4. பிள்ளைகளை பெற்றோர் அதிக கண்டிப்பது, அதிகமாக சுதந்திரமாக விடுவது - இரண்டும் 
5. பாலியல் ரீதியான சரியான போதனை இல்லை, ஆனால் அதற்கு மாறாக மொபைல் மூலம் காட்டும் உக்கிரமான பாலியல் சீண்டல்களின் பாதிப்பு 
6. உணவுக் கட்டுப்பாடு இல்லை, ஆக உடல் ரீதியான மாற்றங்களை சரியாக கையாளப் பழகவில்லை 
7. சுத்தம் இன்மை, சுற்றுச்சூழல் மாசுபடுதல், தன்னலம், சுயநலம் அதிகமான பாதிப்பு 
8. ஒரு அடக்குமுறை சமுதாயம், அரசியல் புரியாத சூழல், மன்னிக்காத குணம்(சிறிய காரியங்களை பெரிது படுத்தும் நிலை), போதை, ஆன்லைன் விளையாட்டுகள், சினிமா மோகம்-சினிமாதான் உலகம், தொலைக்காட்சியின் தொடர்கள்(விபரீத காதல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, யாரையும் நம்பும் கலாசாரம்)
9. வேலையின்மை ஒருபக்கம், அதிக பணம் ஒருபக்கம், திடீர் பணம் (IT வேலை), விலைவாசி உயர்வு, கடன், குடும்ப சிதைவு, ஒற்றை தாய் / தகப்பன், சிறுவயதில் தேவையில்லாத மனப் பதிவு, வியாதி, 
10. காவல்துறை, நீதித்துறை, மருத்துவம்,- மூன்றும் அச்சுறுத்தும் சூழல்- நீதி கிடைக்காத சூழல், அரசு அலுவலர்களின் பாகுபாடு/எதோச்சதிகாரம் 
Q-2 : இந்தியாவில் மனஅழுத்தம் அதிகமானதற்கு காரணம் என்ன?
 
A-2 : 
1. இளையர்கள் சுயமாக சிந்திக்க அதிக வருடம் ஆகிறது அல்லது முடியவில்லை, பாடங்களை (Studies) சமூக வாழ்வியலாக பார்க்காத சூழல், ஆசிரியர் Vs மாணவர் இடைவெளி அதிகம், பள்ளி/கல்லூரிகளில் ஒழுக்க குறைவு, தேர்வு முறை-மனனம் செய்யும் கலாசாரம், பள்ளி/.கல்லூரிகளில் பண ஆதிக்கம், திறமைக்கும் Vs பணம்/ஜாதி மக்கள் - இருக்கும் இடைவெளி  (குறிப்பாக வட இந்தியாவில் படிப்பை ஒரு திறமையில்லாமல், பார்த்தது எழுதும் பழக்கம்), பள்ளி / கல்லூரிகளில் இடைநிற்றல் அதிகரிப்பு, இளம் வயது திருமணம்.     
.
2. கூட்டுக் குடும்பம், குடும்ப கலாசாரம் ஒரு காரணம் - கட்டுப்பாடு என்ற இறுக்கம் 
 
3. ஜாதி பிரிவினைகள், மத பிரிவினைகள் ஒரு முக்கிய காரணம், நகரத்துக்கும் Vs கிராமத்திற்கும் இடையே பெரிய இடைவெளி 
 
4. பிள்ளைகளை பெற்றோர் அதிக கண்டிப்பது, அதிகமாக சுதந்திரமாக விடுவது - இரண்டும் 
 
5. பாலியல் ரீதியான சரியான போதனை இல்லை, ஆனால் அதற்கு மாறாக மொபைல் மூலம் காட்டும் உக்கிரமான பாலியல் சீண்டல்களின் பாதிப்பு, பெண்கள் /குழந்தைகள் பாலியல் சீண்டல் அதிகரிப்பு, ஆண்  Vs பெண் இடைவெளி அதிகம்  
 
6. உணவுக் கட்டுப்பாடு இல்லை, ஆக உடல் ரீதியான மாற்றங்களை சரியாக கையாளப் பழகவில்லை 
 
7. சுத்தம் இன்மை, சுற்றுச்சூழல் மாசுபடுதல், தன்னலம், சுயநலம் அதிகமான பாதிப்பு 
 
8. ஒரு அடக்குமுறை சமுதாயம், அரசியல் புரியாத சூழல், மன்னிக்காத குணம்(சிறிய காரியங்களை பெரிது படுத்தும் நிலை), போதை, ஆன்லைன் விளையாட்டுகள், சினிமா மோகம்-சினிமாதான் உலகம், தொலைக்காட்சியின் தொடர்கள்(விபரீத காதல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, யாரையும் நம்பும் கலாசாரம்)
 
9. வேலையின்மை ஒருபக்கம், அதிக பணம் ஒருபக்கம், திடீர் பணம் (IT வேலை), விலைவாசி உயர்வு, கடன், குடும்ப சிதைவு, ஒற்றை தாய் / தகப்பன், சிறுவயதில் தேவையில்லாத மனப் பதிவு, வியாதி, 
 
10. காவல்துறை, நீதித்துறை, மருத்துவம்,- மூன்றும் அச்சுறுத்தும் சூழல்- நீதி கிடைக்காத சூழல், அரசு அலுவலர்களின் பாகுபாடு/எதோச்சதிகாரம் 
 

வாழ்க்கை என்றால் கணவன் / மனைவி உறவு மட்டுமே என்று நகரத்தில் இருப்பவர்களும், உற்றார், உறவினர், பெற்றோர், கூட்டு முயற்சி என்று கிராமத்தில் இருப்பவர்களும் தவறாக நினைத்துக்கொண்டு இருப்பதும்(இரண்டுமே வேண்டும் தேவைக்கேற்ப-balanced life), பல காதல் செய்து ஒரு காதல் திருமணம் செய்து ஆனால் பாதிப்பு / விவாகரத்து அதிகமாகி வரும் சூழல்.  நிச்சயக்கப்பட்ட திருமணம் கூட இருவரும் பரஸ்பரம் நிதி மேலாண்மையில் பற்றாக்குறை ஆகியவும், ஆண்மைக்குறைவு ஒரு முக்கிய காரணமாகவும் இருக்கிறது. பெண்களுக்கு இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற ஒரு தேவையற்ற முயற்சியும், பணத்திற்கு ஏமாற்றும் ஆண் /பெண்.