2023யை நோக்கி

09/01/2019 09:14

2023யை  நோக்கி

அன்பானவர்களே நாம் இந்த உலகத்தில் எந்தக் காலத்திலும், எந்த பூகோள இடத்தில் இருந்தாலும் அல்லது  எந்த வருடத்திலோ, எந்த நாட்டிலோ வாழ்ந்தாலும், வாழும்போது எப்படி வாழவேண்டும், எதற்காக வாழவேண்டும், எதைநோக்கி வாழவேண்டும் என்ற வாழ்வியல் காரணிகளை(Factors) நமக்கு எந்த ஒரு புராணமும், இதிகாசமும் அல்லது எந்த மனிதர்களோ தெளிவாக அல்லது புரியும்படி கூறவில்லை.  காலங்கள் மாறலாம், மனிதனும் மாறலாம், ஆனால் வேதமோ, அதின் மூலப்பொருளாகிய ஆண்டவராகிய இயேசுவோ என்றுமே மாறுவதில்லை. இதை வேதம் தெளிவாக அந்தந்த காலத்திற்கு ஏற்ப மனிதனுக்கு எடுத்துக் கூறுகின்றது.  ஒரு குறிப்பிட்ட காரணத்திற்கு விடை தெரியவில்லையே என்று பதட்டம் அடைய தேவையில்லை.  நமது அனுதின எல்லா வாழ்வியல் முறையும் கிறிஸ்துவின் கிருஸ்தவ முறையில் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது கேள்வி!.

 

நான் 14.10.2018 அன்று அதிகாலையில் ஜெபித்துகொண்டிருந்த வேளையில் கண்ட ஒரு காட்சிதான் இந்த “2023யை  நோக்கி”.  நான் சரியாக பார்க்க முடிந்தது, “2023யை நோக்கி” என்ற சொல்.  வேதத்திலே புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மாற்கு, லூக்காவில் மட்டும் 526 தடவை “நோக்கி” என்ற சொல்  வருகிறது. கிருஸ்தவர்கள் எதை நோக்கி இருக்கவேண்டும்? எதை நோக்கி செல்ல வேண்டும்.

கிறிஸ்தவன் ஒவ்வொருவனுடைய விருப்பம் என்னவாய் இருக்கும் என்றால், நாம் இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கை நம்மை அடுத்த வாழ்வாகிய  பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க வைப்பதே ஆகும். 

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் ! கர்த்தாவே! கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

நரகம்தான் வாழ்வு என்றால் இந்த உலகத்தோடு ஒத்தவாழ்வு வாழ்ந்தாலே போதும். ஆக ஒருவன் எப்படி அல்லது எப்பொழுது இந்த பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான்?. அதாவது கடவுளின்/பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே.  அப்படியென்றால் அவரின் சித்தம் என்ன? பாவத்திற்கு விலகி நீதிக்கு பங்காளியாகி பரலோக நித்திய வீட்டிற்கு ஆயத்தம் செய்வதே இந்த சித்தம். பிறரினின்றும் விலக்கி வைக்கப்பட்ட வாழ்க்கை (secluded) பிரிக்கப்பட்ட வாழ்க்கை (Separated) என்ற இரண்டில், நாம் இந்த உலகத்தில் வாழும்போது முதலில் உள்ள பிறரினின்றும் விலக்கி வைக்கப்பட்ட வாழ்க்கை (secluded) வாழவேண்டுமே ஒழிய பிரிக்கப்பட்ட (Separated) வாழ்க்கையோ அல்லது உலகத்தோடு ஒத்த வாழ்க்கையோ வாழக் கூடாது.

ஒருவன் இந்த உலகம் முழுவதும் ஆதாயம் பண்ணினாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

இந்த உலகத்தில் பிறந்த ஓவ்வொருவரும் நாம் இங்கு கஷ்டப்படாமல் இருக்கவேண்டும் என்றே நினைக்கின்றனர். இது தவறா? சரியா? என்றால்  இரண்டுமே சரியில்லை. இன்பமும் துன்பமும், கஷ்டமும், நஷ்டமும், சந்தோசமும், சோர்பும் கலந்த கலவை தான் நமது வாழ்க்கை. ஆனால் ஒரு கிறிஸ்தவர் எல்லா சூழ்நிலையிலும் தமது ஆத்மாவைக் கெடுத்துவிடக் கூடாது என்பதுதான் கிருஸ்தவ ஆன்மிகம்.  ஆதி மனிதனும் மனுசியும் ஒரு பழத்தின் மூலம் பாவம் செய்தார்கள் அல்லது தனது ஆன்மாவை கெடுத்துவிட்டார்கள். பலர் பணம் வந்ததும் அல்லது ஏழ்மை வந்ததும் இந்த ஆத்மாவை கெடுத்துவிடுகின்றனர். சிலர் துன்பம், கஷ்டம், சந்தோசம் அல்லது வியாதி வந்தால் ஆத்துமாவை கெடுத்துவிடுகின்றனர். முக்கியமாக மனிதன் ஒவ்வொருவரும் இந்த “திருப்தி” என்ற சொல்லிற்கு தரும் விளக்கம் சரியாக இருக்காது. ஏனெனில் அநேகமாக எவரும் எதிலும் பொதுவாக திருப்தி அடைவதில்லை. இதை, “போதும்” என்று சொல்லுவதில்லை என பொருள் கொள்ளலாம். ஆனால் அநேக கிருஸ்தவர்கள், தாங்கள் ஊழியத்தில் அல்லது கிறிஸ்தவத்தில் திருப்தி அடைகின்றனர், நான் ஒழுங்காக ஆலயத்திற்கு செல்கிறேன், காணிக்கை நிறைய செலுத்துகிறேன், ஆலய நிர்வாக குழுவில் அநேக ஆண்டுகள் நிர்வாகியாக இருக்கிறேன், போதகரிடம் அன்பாக இருக்கிறேன், நான் போதகராகவே இருக்கிறேன், அல்லது போதகரின் பிள்ளை/மனைவியாக இருக்கிறேன் என்றெல்லாம் நினைக்கிறோம். இது போதாது என்று வேதம் சொல்லுகிறது. தினம் தினம் ஆன்மீகத்தில் முன்னேறுவதே கிருஸ்தவ வாழ்க்கை. உன்னைப் பார்ப்பவர்கள் இயேசுவை தினமும் பார்க்கவேண்டும். வாரத்தில் ஒருநாள் மட்டுமல்ல.

கீழே உள்ள ஒரு உண்மைச்சம்பவம் இதை தெளிவாக நமக்கு விளக்குகிறது. அப்போஸ்தலர் 3 ம் அதிகாரத்தில் பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். அங்கே பிறவிச் சப்பாணியான ஒரு மனிதன் அவர்களிடமும் பிச்சை கேட்டான். பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

இதன் சம்பவம் நமக்கு தெளிவாக கூறுவது என்ன?

 

ஒருவேளை நாம் வியாதியிலோ, கடனிலோ, வறுமையிலோ, துன்பத்திலோ, திருப்தியின்மையாலோ, நிம்மதியின்மையாலோ, தனிமையாலோ, வாழ்க்கையில் விரக்தியோ, தற்கொலைதான் தீர்வு என்று எண்ணி வாடியிருக்கிரீர்களோ! முதலில் ஆண்டவரை விசுவாசத்தோடு நோக்கிப் பார்க்கவேண்டும். 

இதை வேறு விதமாகவும் பார்க்கலாம், அவன் தனக்கு என்ன கிடைக்கும் என எதிர் பார்த்தது ஒன்று, ஆனால் நடந்தது என்ன? அவனோ அல்லது வேறு யாரோ எதிர்பாராதது நடந்தது. தனக்கு வரும் ஆசிர்வாதங்களை சரியாக புரிந்து கொள்ளாமல், உலகப்பிரகாரமாக அல்லது சரீரப்பிரகாரமாக, பிச்சை அல்லது பணம் வேண்டும் என்று மட்டும் விரும்பினான். இதைதான் வேதம் தெளிவாக சொல்லுகிறது  நாம் நினைப்பதற்கும் வேண்டிக் கொள்ளுவதற்கும் மிகவும் அதிகமாக நமக்கு தருபவர் நம் ஆண்டவர்”. அவனைப் பொருத்தமட்டில் பணம் வேண்டும், ஆனால் ஆண்டவர் அவனை மற்ற மனிதர்களைப் போல எழுந்து நடந்து தன் காரியங்களை அல்லது வருமானத்தை அவனே ஈட்ட முடியும் என்ற நிலையை அவன் ஒருபோதும் நினைக்கவில்லை.

மேலும் அவன் இன்னொரு முக்கியமான காரியத்தைச் செய்தான், சுகம் பெற்றதும் அவன் சென்றது ஆலயத்திற்குள். ஆம் அருமையானவர்களே! நாமாக இருப்போமேமென்றல், நமது பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ, மருதுவர்களிடமோ சென்றிருப்போம்.  நன்றி மறப்பது நன்றன்று என்று கூறுவதுபோல ஆண்டவருக்கு நன்றி செலுத்த முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

மேலும் நாம் இந்த உலகத்தில் மாற்றுத் திறனாளியாக (ஊனமாக) பிறந்தாலும் கூட, ஆன்மீக ஊனம் (மாற்றுத்திரனாளி) மட்டும் கூடாது.  

 

ஆனால் இங்கே அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு: தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

ஒருவேளை நாமும் இந்த மனிதனைப்போல அநேக நேரங்களில் நமக்கு ஆண்டவர் கொடுக்கும் ஆசிர்வாதங்களை கண்டு அவருக்கு துதிப்பதை விட்டு விட்டு மனிதர்களைப் பின்பற்றுகிறோம். பலர் உலகப் பிரகாரமான காரியங்களை தமது ஜெபத்தில் பிச்சையாக கேட்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறோம். மனித பிரகாரமாக அப்படித்தான் செய்யமுடியும், ஆனால் இப்பொழுது ஆண்டவரை நன்கு அறிந்து நாம் அப்படி செய்வது நல்லதல்ல. ஆண்டவரின் சித்தம் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும்; அதற்கு முயற்சிக்க வேண்டும்.

 

ஆண்டவர் அந்த பிறவிச் சப்பாணியான மனிதனை நேசித்தார் என்பதை வசனம் (நீதி 3 : 12) கூறுகிறது,

தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனை சிட்சிக்கிறது போல,கர்த்தரும் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனை சிட்சிக்கிறார்  ஆக சிட்சையை அற்பமாக எண்ணக் கூடாது. சிட்சையில் அவரின் சித்தம் என்ன என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும்.

 

இந்த சிட்சை எந்த உருவத்திலும் நமக்கு தேவன் அனுமதிக்கலாம், அது ஒருவேளை வியாதியாக இருக்கிலாம், பணத்தேவையாக இருக்கலாம், மனித உதவியாக இருக்கலாம். ஆனால் நாம் சோர்ந்து போகக்கூடாது,

எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய் காணாமல் துக்கமாய் காணும்” (எபி 12:11)

 

மேலும் கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கு கிடைக்கும் அற்புதங்களையும், அதிசயங்களையும்,  அனுதின மற்ற காரியங்களையும் ஆண்டவருக்கு பிரியமாக செய்யும்போது மற்ற ஜனங்கள் மிகவும் ஆச்சரியப் பட்டு ஆண்டவரை நோக்கி வருவார்கள். எனக்குக் கிடைத்தது என்னோடு போகட்டும் என்று இருக்கக் கூடாது.  இதுதான் இன்றைய அநேக கிருஸ்தவர்கள் செய்யும் தவறாகும். ஏதாவது கிருஸ்தவர்களிடம் அரிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கும் இந்த உலகத்திற்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும். முதலில் நமக்கு கடவுள் கொடுத்த பல ஆயிரம் காரியங்களை நினைத்து கடவுளை மகிமைப் படுத்தவேண்டும். மற்ற மக்களுக்கு கிடைக்காக ஓன்று “ஆத்தும இரட்சிப்பு”, அதாவது பாவத்திலிருந்து விடுதலை. இந்த உலகத்தில் நாம் அனுதினமும் வாழ்வது அவரின் சுத்த கிருபை என்பதை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். இதைப் புரிந்துகொண்டால் நமக்கு தேவன் தரும் சமாதானம் நம்மிடம் தங்கும். மற்றவர்கள் போல நாமும் துக்கித்து புலம்பத் தேவையில்லை. உங்கள்  துக்கம்  சந்தோஷமாக மாறும்.யோவான் 16:20

சரி நாம் இந்த 2023யை  நோக்கி செல்லும்போது நாம் என்னென்ன காரியங்களை செய்யவேண்டும், அல்லது செய்யக் கூடாது.

 

முதலாவதாக,

நமது கலாச்சாரம் “கிறிஸ்தவ கலாச்சாரம்”, கிருஸ்தவர்களுக்கு ஜாதி ரீதியான, மத ரீதியான அல்லது இன ரீதியான கலாச்சாரம் தேவையில்லை.  இந்த மார்க்கம்தான் நடைமுறை வாழ்க்கையில் எப்படி கிருஸ்துவை பிரதிபலிப்பது (சிருஷ்டி) அல்லது சகமனிதர்களுடன் (சிருஷ்டிப்பு) எப்படி வாழ்வது என்பதை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது. இந்த கலாச்சாரம் அல்லது மார்க்கம் பற்றி தெரிய தேவைப்படுவது ஒரு வேதமும், நமது வாழ்வும்தான்.  அநேக நேரங்களில் நாம் நமது சக தேவ மனிதர் என்று சொல்பவர்களைக் கண்டு அவரை அல்லது அவரின் மாதிரியைப் பின் பற்ற விரும்புகிறோம். அது தான் பல நேரங்களில் நமது தோல்வியின் முதல்படி ஆகிறது.  நாம் நமது இயேசுவை முன்மாதிரியாக வைக்கவேண்டுமே ஓழிய மற்ற மனிதர்களை அல்ல.

இது எப்படி சாத்தியமாகும் என்பதற்கு வேதம் தரும் பதில்கள் அநேகம். அதில் மத்தேயு 19:19 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். மத்தேயு 22:37 & 39 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு  இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்,  உன்னிடத்தில்  நீ  அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. கலாத்தியர் 5-14. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.

For all the law is fulfilled in one word, even in this; Thou shalt love thy neighbour as thyself.

லூக்கா 23:34 அப்பொழுது (சிலுவையில்) இயேசு:  பிதாவே  இவர்களுக்கு  மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.

இங்கே இயேசு அவரை நிந்தித்தவர்களை மன்னிக்கும்படி பிதாவிடத்தில் பரிந்து பேசுகிறார். மரணத்தருவாயில் ஒருவன் இந்த மாதிரி அன்பின் சிந்தனையில் அதாவது உடல், பொருள், ஆவி அனைத்திலும் கிருஸ்தவ அன்பு இருந்தால் மட்டுமே இப்படி பேச முடியும். கிறிஸ்துவின் மாம்சமும் ஆவியும் ஒரே சிந்தையில் இருப்பதால் மட்டுமே இப்படி பேச முடியும் என்பதை தெளிவாக நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஆக கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்து நமக்கு கற்பித்த இந்த கட்டளையை ஒவ்வொரு கிறிஸ்தவனும் பின் பற்றி நடக்கும்போது நாம் இந்த உலகத்தை 2023ல் கிறிஸ்துவின் கலாச்சாரத்திற்கு அழைத்துச் செல்லலாம்.  
 

 

 

இரண்டாவதாக.....

ஒவ்வொரு கிறிஸ்தவனும் தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறை வசனங்கள் :

கலாத்தியர் 5 – 6 : கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் (சடங்காச்சாரங்கள்) விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.   13. சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு (சுதந்திரம்) அழைக்கப்பட்டீர்கள்,  இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற் கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். 16. பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். This I say then, Walk in the Spirit, and ye shall not fulfil the lust of the flesh. 17. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டு மென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. For the flesh lusteth against the Spirit, and the Spirit against the flesh: and these are contrary the one to the other: so that ye cannot do the things that ye would.  18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் (Law-சட்டம்) கீழ்ப்பட்டவர்களல்ல. But if ye be led of the Spirit, ye are not under the law. ஏனெனில் அதை நீங்கள் தவறாது கடைப் பிடித்துவிடுவீர்கள்.

ஒரு கிறிஸ்தவன், எதையெல்லாம் செய்யவேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது, என்று மேலே உள்ள வசனங்கள் தெளிவாக நமக்கு கூறுகிறது.

அதாவது வசனம் 24. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

And they that are Christ's have crucified the flesh with the affections and lusts.

ஏனெனில் வசனம் 17 சொல்லுகிறது, மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
 

மேலே உள்ள வசனத்தின்படி மாம்சத்தின்படி என்றால் என்ன?, ஆவியின்படி என்றால் என்ன?.

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,  விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.  Now the works of the flesh are manifest, which are these; Adultery, fornication, uncleanness, lasciviousness, Idolatry, witchcraft, hatred, variance, emulations, wrath, strife, seditions, heresies, Envyings, murders, drunkenness, revellings, and such like: of the which I tell you before, as I have also told you in time past, that they which do such things shall not inherit the kingdom of God.

ஆக பொதுவாக மாம்சத்தின்படி இந்த 17 காரியங்களை செய்பது தவறு அல்லது பாவமாகும்.

 

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.   But the fruit of the Spirit is love, joy, peace, longsuffering, gentleness, goodness, faith, Meekness, temperance: against such there is no law. 

ஆக ஆவியின்படி இந்த 9 காரியங்களை செய்யாமல் இருப்பதும் பாவம் அல்லது நடைமுறை கிருஸ்தவம் என்று சொல்லலாம். செய்யவேண்டியதை செய்யாமலிருப்பதும் தவறு அல்லது பாவம்.

இந்த 26 காரியங்களை நாம் வேதத்தில் கூறியபடி நடந்தாலே நாம் வருகிற 2023ம் ஆண்டில் இந்த உலகத்தை நம்முடன் கிருஸ்தவ கலாச்சாரத்திற்கு அழைத்துச் செல்லலாம்.

நாம் இதற்க்கு முதலில் தயாராக இருக்கவேண்டும்.

முதலில் மாம்சத்தின்படி செய்யக்கூடாத இந்த 17 காரியங்களை பார்ப்போம். அவையாவன: 

 

விபசாரம்- மத்தேயு 5 - 27. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.  ஆக இந்த மாற்றம் ஒவ்வொரு தனி கிருஸ்தவனிடத்திலும் வரவேண்டும், கண்டிப்பாக வரவேண்டும். இதற்கு ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் சரியாக வேதம் சொல்லுவது போல நடந்து கொள்ளவேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கிருஸ்தவ பண்பாட்டை அனைவரும் பின்பற்றவேண்டும். ஒரு நபர், வேதம் சொல்லுகிற “இச்சையடக்கம்” என்ற சொல்லை பின்பற்றினாலே, இந்த பாவம் தவிர்க்கப் படும்.  

 

வேசித்தனம்- I கொரிந்தியர் 7:2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.  I கொரிந்தியர் 10:8 அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும்  வேசித்தனம் பண்ணாதிருப்போமாக. வெளி 2:20 ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர்  வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். இன்றைக்குகூட அநேக ஆண்களும், பெண்களும் வேசித்தனத்திற்கு இசைவாக ஆடை உடுத்துவது, அலங்காரம் செய்வது மேலும் தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பது போன்ற காரியங்களை அடுத்த பாலினத்தை கவரும் வண்ணம் விலங்குகளைப்போல செய்கிறோம். இது தவறு மாபெரும் தவறு. 

அசுத்தம் – impurity இதைக் கலப்படம் என்றோ,  துாய்மைக்கேடு கூறலாம்.

கொலோசெயர் 3:5 ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே இதன் பொருள்.

 

காமவிகாரம் – இதை தளர்வான நடத்தை என்றே கூறலாம். நாம் நம்முடைய நடைமுறை காரியங்களில் சரியாக 

வேதம் போதிக்கிறபடி செய்யவேண்டும். நமது உள்ளத்தில் ஆண்டவர் இருக்கும்போது மட்டுமே இந்த காமவிகாரத்தை 

ஜெயிக்க முடியும். ஆண்டவர் நமது இடத்தில் குடியிராவிட்டால், அதில் சாத்தான் குடியிருப்பான். ஏதாவது ஒன்றுக்கு 

இடம் அளித்தே ஆக வேண்டும்.  இதை நாம் மேற்கொள்ளாவிட்டால் அதற்கு அடுத்த பாவம் வேசித்தனம், அடுத்து 

விபச்சாரம் தானாக எந்த இடைஞ்சலும் இல்லாமால் வரும்.  

விக்கிரகாராதனை – பொருளாசை என்பது ஒருவகை விக்கிரகாராதனை என்பதை நாம் முதலில் நாம் அறிந்துகொள்ளவேண்டும். நாம் ஒரு பொருளை, ஒரு மனிதனை அல்லது ஒரு காரியத்தில் கடவுளைவிட அதிகம் கவனம் செலுத்தினால் அல்லது அதிகம் நேசித்தால் அதுவே முதல் விக்கிரகாராதனை. யாத்திராகமம் 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள்  உண்டாயிருக்கவேண்டாம்.  உபாகமம் 5:7 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். வேறே தேவர்கள் என்று ஒரு உருவகத்தை நாம் உண்டாக்கி வணக்கக் கூடாது. மண், பெண், பொன் ஆகிய காரியங்களில் இட்சை இருக்கக் கூடாது என்பது இதன் பொருள்.

 

மேலும் இந்த விக்கிரகாராதனை என்பது பணஆசை இருப்பவர்களுக்கு அதிகமாக பொருந்தும்,  I தீமோத்தேயு 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.   எபிரெயர் 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.   லூக்கா 12:15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.  லூக்கா 12:20 தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

 

பில்லிசூனியம் – Witchcraft.  ஒருவருக்கு விரோதமாக மாந்திரீகம் செய்தல் அல்லது அடுத்தவருக்கு துரோகம் செய்தல். 

மனதளவில் ஒருவருக்கு இந்தமாதிரி காரியம் செய்பவர் யார் எனில், தனது ஆன்மாவை இழந்து, மதிகெட்டு திரிகிறவர்கள்தான். 

அன்பு ஒன்றே இதை தடுக்கும். ஆண்டவரைபோல பகைவரையும் மன்னிக்கும் சுபாவம் நமக்கு வேண்டும். 

 

பகைகள் – Enmities – பகை என்பது ஒருவரை வெறுப்பதும், கெட்ட உணர்வுகளோடு பார்ப்பதும், விரோத போக்கில் பார்ப்பதும், 

வெறுப்பில் பார்ப்பதும் அதாவது இருதயத்தில் நினைப்பதே தவறு. அதாவது நமது இருதயத்தின் ஆழத்தில் இருந்து அந்த 

எண்ணத்தை அகற்ற வேண்டும். நமது ஆவி, ஆத்துமா, சரிரம் தூய்மையாக இருந்தால் மட்டுமே இந்த பகையை விரட்ட முடியும்.  

இன்றைய வாழ்வில் இந்த ஜாதி மற்றும் மதம் இதில் முதலிடம் வகிக்கிறது. 

 

நடந்த ஒரு சம்பவம் : ஒரு பெரிய பதவியில் உள்ள போதகர், அநேகரை வசியப்படுத்தினவர், ஒருநாள் பிரசங்க மேடையில்

“கிறிஸ்தவர்களிடையே (நம்மிடையே) ஜாதி பாகுபாடு கூடாது என்று உருக்கமாக பேசினார்”. அனைவரும் இதை வரவேற்றனர்.  

ஆனால் அவரோ இரண்டு தினங்களுக்குப் பிறகு, தனது ஜாதி பலத்தை நிரூபிக்க பிஷிப்(முதன்மை போதகர்)  அவர்களுக்கு தனது ஜாதி  ஆட்கள் எவ்வளவு பேர் அவருக்கு ஆதரவு தருவார்கள் என காண்பிக்க சுமார் இருநூறு பேருடன், ஜாதிக்கட்சி தலைவரைப் போல  பிஷப்பை சந்தித்து தனது ஆதரவை காண்பித்தார். இதைப் பார்த்த ஒரு பெரியவர் அவரிடம் கேட்டதற்கு அவர் தந்த விளக்கம் “அது திருமண்டல அரசியல், ஆனால் இது திருச்சபை ஒழுங்கு”. அடுத்து அவர் சொன்ன பதில் மிகவும் ஆச்சரியப்படவைத்தது “ஜாதி  ஒற்றுமை பற்றி பேசவில்லை என்றால் பணம் வராது”. இது எவ்வளவு பெரிய அவமானம், இதைத்தான் இன்றைய கிருஸ்தவ சமுதாயமும் செய்கிறது.  இது பாவம், மேலும் வேதம் தெளிவாக சொல்லுகிறது, “அறிந்தும் செய்கிறவன் அநேக அடிகளால் அடிக்கப் படுவான்”.  எல்லாரும் சமம் என்ற கிருஸ்தவ எண்ணம் நமது இரத்தத்தில், இருதயத்தில் படிந்திருக்கவேண்டும்.  

 

விரோதங்கள் -  நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து அல்லது எதிர்த்து நிற்பது விரோதம். அநேக நேரங்களில் நீதி செய்கிறவர்களை நாம் விரோதிக்கிறோம், நமக்கு மட்டும் இவர் இதை செய்யவில்லையே என்று எண்ணுகிறோம். அவர் நீதி செய்பவரா என்று மட்டும் பார்க்கவேண்டும். அவ்வாறு நீதி நியாயங்களுக்கு அனுசரணையாக இல்லாமல் இருப்பதுதான் விரோதம். ஆண்டவரின் அன்பு நம்மில் இருக்கும்போது மட்டுமே இந்த விரோதங்கள் நம்மிடம் இருந்து அகற்றப்படும். விரோதங்கள் பிரிவினையை ஏற்படுத்தும், பிரிவினை மனஸ்தாபத்தை கொண்டுவரும். மனஸ்தாபம் பாவம் செய்ய தூண்டும்.

 

வைராக்கியங்கள் – ஆங்கிலத்தில் Zealous அதாவது சுறுசுறுப்பு மிக்க அல்லது பெரும் ஆர்வம் மிக்க என்பதாகும்.   அநேகர் ஆர்வக்கோளாறு காரணமாக தவறு செய்வது வருந்த தக்கது.  தான் நினைத்ததை, நல்லதோ கேட்டதோ செய்யவேண்டும் என்பதும், தனது இடத்தில் இருந்து இறங்கி வராத குணமும் தான் இந்த வைராக்கியம். லேவியராகமம் 19:18 பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
 

கலாத்தியர் 4:18 நல்விஷயத்தில் வைராக்கியம் பராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில் இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும்.

அநேக குடும்பங்களில் தாங்கள் பிள்ளைகளுக்கு நல்ல காரியங்களில் வைராக்கியம் கொள்ள பழக்குவிக்கவேண்டும். பெற்றோர் தனது பிள்ளைகளை எரிச்சல் படுத்தி தங்களில் நிலையை சம்மதிக்க வைக்கின்றனர். அவர்களுக்கு புரியும் வகையில் பெற்றோர் இறங்கி பேசவேண்டும் அதை செயலிலும் செய்து காட்டவேண்டும். பிள்ளைகளுக்கு தனது பெற்றோர் தான் Role Model (முன் உதாரணம்), முதல் கதாநாயகன், அல்லது கதாநாயகி. நமது முன்மாதிரியைத்தான் பெரும்பாலும் பிள்ளைகள் கடைப் பிடிப்பார்கள்.

Unhappy with parents who scolded him, 21-year-old stabs father, mother 26 times

India Today11 October 2018

Unhappy with parents who scolded him, 21-year-old stabs father, mother 26 times

Police said the accused was irritated because his parents would prohibit him from going out for parties.

The triple murder took place in New Delhi's Kishangarh.

நமது பிள்ளைகள் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற எண்ணம் நமக்கு எப்பொழுதும் இருக்கவேண்டும். நீ லஞ்சம் வாங்கினால் உனது பிள்ளைகளும் வாங்குவார்கள். நீ மதுபானம் குடிப்பவராக இருப்பவராக இருந்தால் உன் பிள்ளைகளும் மதுபானம் குடிப்பார்கள். மத வெறி, ஜாதி வெறி, பண வெறி போன்றவற்றில் நீ சிக்கி இருந்தால் உன் பிள்ளைகளும் அதற்க்கு பலி ஆவது உறுதி.

மேலே உள்ள சம்பவம் இதை நமக்கு தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஆணவக் கொலைகள் அதிகமாக இருப்பதற்கு இந்த வைராக்கியம்தான் முக்கிய காரணம்.

 

கோபங்கள்: கோபம் கொலையையும் செய்யும். கொலையால் கோபமும் வரும். இதற்குப் பல பெயர்கள் உண்டு- angerகோபம், dander - சீற்றம்,  resentment - ஆத்திரம், vexation - வெறுப்பூட்டுவது, தொந்தரவு. ஆக இந்த கோபம் பல பாவங்களுக்கு காரணமாகிவிடும். யோபு 5:2 கோபம் நிர்மூடனைக் கொல்லும்;  பொறாமை  புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.
 

சண்டைகள்: உண்மை அன்பிலே இதைக் காணமுடியாது. சண்டை என்றால் ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது “துஷ்டனைக் கண்டால் தூர விலகு”, என்பதுபோல ஒரு இடத்தில் நமக்கு இடைஞ்சல் வருவது தெரிந்தால் அந்த இடத்தில் இருந்து விலகுவது சாலச்சிறந்தது. சண்டையில் வார்த்தைகள் பெருகி பாவமும் பெருகும்.  ஆக சண்டையை தவிர்ப்பது நல்லது. சண்டை முற்றினால் வியாதி வரும்(ஆஸ்பத்திரி செலவு), பிறகு நீதிமன்றம் மற்றும் காவல்துறை செல்ல வேண்டும். ஒருவர் ஆஸ்பத்திரி, காவல்துறை மற்றும் நீதிமன்றம் ஆகிய இம்மூன்றும் செல்லாமல் இருந்தால் அவன் மிகவும் கொடுத்து வைத்தவர்.

 

பிரிவினைகள்: பல மார்க்க பேதங்கள், ஒரு குடும்பத்தில் பிளவு, கணவன் – மனைவிக்கு இடையே பிரிவு, பெற்றோர் – பிள்ளைகள் இடையே பிரிவு, திருச்சபையிலே பிரிவு, இன்னும் பல.... அன்பு எல்லா பிரிவினைகளையும் மூடும் ஒரு மிகப்பெரிய ஆயுதம்.  இன்றைக்கு அநேக குடும்பங்கள் விவாகரத்து காரணமாக கதி கலங்கி இருக்கிறார்கள்.

 

ரோமர் 6:19 உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். க்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.   ரோமர் 6:18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.

 

மார்க்கபேதங்கள்:  கடைசி காலங்களில் அந்திக்கிறிஸ்து பல வழிகளில் முக்கியமாக கிறிஸ்தவர்களை வஞ்சிப்பதிலேயே குறியாக இருப்பான். அதாவது பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.  ஆக பல பிரிவுகள் கிருஸ்தவர்களுக்குள்ளே இருப்பது வருத்தம் அளிப்பதாகும். ஒருவேளை தொழுகிற விதம் வேறுமாதிரி இருப்பிலும், பிதாவையும் குமாரன் இயேசுவையும் மறுதலிக்கிறவர்கள் அல்லது முக்கியத்துவும் கொடுக்காதவர்கள் இவர்கள்.

I யோவான் 2:18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது;  அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக  அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். I யோவான் 2:22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. I யோவான் 4:3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. II யோவான் 1:7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

வேதம் தெளிவாக கூறுகிறது .... I கொரிந்தியர் 3:4 ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா? 

I கொரிந்தியர் 12:13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.

கலாத்தியர் 3:28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

 

பொறாமைகள்: பொறாமை என்பது பல பாவங்களுக்கு வழிவகுக்கும் ஒரு தீய செயல் ஆகும். வேதத்திலே 37 இடங்களில் இந்த பொறமை குறித்து நாம் பார்க்கலாம். வேதம் சொல்லுகிறது நீதிமொழிகள் 14:30 சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி. ஆக இந்த பொறாமை நம்மையும் கெடுத்து அடுத்தவர்களையும் கெடுக்கிறது. மேலும் ஆண்டவர் நமக்கு வேதத்தின் மூலம் இன்னும் தெளிவாக கூறுவது என்னவென்றால், நமது எதிரி அல்லது பொல்லாத மனிதர் மேல்கூட நாம் பொறமை கொள்ளக் கூடாது.  நாம் அநேக நேரங்களில் நமது உடன் சபை கிருஸ்தவன் அல்லது உடன் பிறப்புகள் நம்மை விட மேலே வந்து விட்டால் ஏற்ப்படும் இந்த காழ்ப்புணர்ச்சிதான் இந்த பொறமை என்னும் நோய்.    நீதிமொழிகள் 24:1 பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.  நீதிமொழிகள் 24:19 பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே. நீதிமொழிகள் 14:30 சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.

ஆக இந்த பொறாமையை மேற்கொள்ளுவது எப்படிஎன்றால் கடவுள் கொடுக்கும் அன்பு என்ற ஆயுதம்தான் ஒரு வழி.  I கொரிந்தியர் 13:4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,.....  இன்னொரு வழி மனிதர் நம் மீது புகழும் பொது இந்த வீண் புகழ்ச்சியை விரும்பாமல் இருக்கவேண்டும்.  கலாத்தியர் 5:26 வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

இன்றைக்கு அநேக பிரசங்கிமார்கள் கூட இதில் அகப்பட்டுக் கொண்டு விடுபட முடியாமல் தடுமாறுகிறார்கள்.  பிலிப்பியர் 1:15 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். இந்தவிதமான போதனை ஆண்டவருக்கு அருவருப்பு அதாவது மாம்சத்திற்குரியவர்கள்.  கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசமே இதில்தான் ஆரம்பிக்கிறது.  I கொரிந்தியர் 3:3 பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?

மேலும் கடைசியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்கூட இந்த பொறாமைதான் கொன்றது. அவரது சொந்த குல யூதர்கள் அவர்மேல் இந்த பொறமை கொண்டனர். மத்தேயு 27:17 பொறாமையினாலே அவரை (இயேசுவை) ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,   மாற்கு 15:9 பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,..... பொறாமை, கொலையில் கொண்டு போய் நிறுத்தும்.

 

கொலைகள்கொலை இரண்டு வகைப்படும் ஓன்று ஆவிக்குரிய கொலை அடுத்தது மாம்சத்திற்குரிய கொலை.  I யோவான் 3:15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ  கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

பலர் தங்களை தாங்களே கொலை செய்துவிடுகின்றனர். மனசாட்சிக்கு விரோதமாக செய்யும் அனைத்துக் காரியங்களும் ஆவிக்குரிய கொலை ஆகும். 

ரோமர் 13:9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக,  கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.

வெறிகள்

எபேசியர் 5:18 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;

அப்போஸ்தலர் 26:11 சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நியபட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். லூக்கா 6:11 அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.

 எசேக்கியேல் 39:19 நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகுமளவும் கொழுப்பைத் தின்று வெறியாகுமளவும் இரத்தத்தைக் குடிப்பீர்கள்.

வெளி 17:6 அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

களியாட்டுகள்:   கேளிக்கை விருந்து அல்லது தனது நிலை தவறி காரியங்களில் ஈடுபடுவது. இதன் ஆரம்பம் மற்றும் முடிவு பாவம். ஆரம்பத்தில் சுகமாக இருக்கும், போகப்போக தனது உடல் பலன் இழந்து பாவத்தின் சம்பளம் மரணம் என்ற வகையில் கொண்டு போய் விடும்.

 

மூன்றாவதாக.....  

நாம் எப்படி அன்பு கூறவேண்டும்....

 

கலாத்தியர் 5 - 14. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். For all the law is fulfilled in one word, even in this; Thou shalt love thy neighbour as thyself.   15. நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். But if ye bite and devour one another, take heed that ye be not consumed one of another. 

முதலில் நாம் அதற்கு முதலில் அவரவர் தம் சரீரத்தை மற்றும் ஆத்மாவை நேசிக்க வேண்டும் அல்லது அன்பு கூறவேண்டும். ரோமர் 12:9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.  II கொரிந்தியர் 6:6 கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,.... I தீமோத்தேயு 1:5 கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச் சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.

II தீமோத்தேயு 1:4 உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.

 

யாக்கோபு 3:17 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

 

I பேதுரு 1:22 ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;

இவ்விதமாக மாயமற்றவர்களாக நாம் இருக்க வேண்டும்.

நடந்த ஒரு சம்பவம் :

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தனவாம்.

அதில் ஒரு கப்பலின் பெயர் “சாம்சன்”, அது டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து சுமார் 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் இருந்ததாம். காப்பாற்றுங்கள் என்ற சமிக்கை வந்தும் அதைப் பார்த்துவிட்டு, சீல் என்னும் கடல் விலங்கைத் திருடவந்தவர்கள் என நினைத்து காப்பற்றப் போய் நாம் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது, நமக்கேன் வம்பு என்று எண்ணி டைட்டானிக்கின் எதிர்த்திசையில் விரைந்து விட்டனர்.

நம்மில் பலர், நமது பாவச்செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி அடுத்தவரின் துன்பங்களைப் பற்றித் துளியும் கவலை படாமல் இருக்கிறோம் இந்த சாம்சன் கப்பலைப் போல.

அடுத்து கலிஃபோர்னியன் என்ற கப்பல், டைட்டானிக் கப்பலிற்கு 14 கி.மீ. தொலைவில் இருந்தது. அந்தக் கப்பலின் கேப்டனும் டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞைகளைப் பார்த்தார்.  ஆனால் அவர்கள் இருட்டாகவும், பனிப்பாறைகள் நிறைந்து மோசமாக சூழ்நிலை இருந்ததால், திரும்பவும் கரைக்கே போய், காலையில் புறப்படலாம் என முடிவெடுத்தனர். சக மாலுமிகள் உதவி கோரிய கப்பலுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்று அவர்களே, அவர்களுக்கு கூறித் தேற்றிக் கொண்டனர்.

இக்கப்பலைப் போன்றவர்கள் நம்மிடையே இருக்கும்,”நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. சூழல், சரியில்லை, நிலைமை சரியானதும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணுபவர்கள்.

மூன்றாவது கப்பல் கர்ப்பாதியா, டைட்டானிக்கிலிருந்து 58 கிமீ தொலைவில் தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அதன் கேப்டன், டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்கை ரேடியோ மூலம் கேட்டவுடன் மண்டியிட்டு இறைவனிடம் எனக்கு வழிகாட்டு எனப் பிராத்தனை செய்துவிட்டு தனது கப்பலைத் டைட்டானிக் கப்பலை நோக்கி திருப்பினார். ஆபத்தான பனிப்பாறைகளிடையே செலுத்தினார். இந்தக் கப்பல்தான் டைட்டானிக்கில் சிக்கியிருந்த 705 பேரைக் காப்பாற்றியது.  தடைகளும்,எதிர்ப்புகளும்,ஆபத்துகளும், பொறுப்பைத்தட்டிக் கழித்திட காரணங்களும் நிச்சயம் குறுக்கிடும், ஆனால் அவற்றை மீறிச் செல்பவர்கள் மட்டுமே உலகில் உள்ள மக்களின் இதயங்களில் நாயகர்களாக வாழ்வார்கள்.

இதுதான் மாயமற்ற அன்பு என்பதாகும். எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செய்வதாகும்.  அன்பு என்பது இன்றைய காதல் என்னும் சொல் என்று தப்பாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. “கண்டதே காதல் கொண்டதே கோலம்” என்பது போல அது ஆகிவிடும்.

ஒரு ஆலய தேர்தல் ஆனாலும், மற்ற ஆலய காரியமானாலும் எதையும் எதிர்பாராமல் அன்புடன் ஈடுபடுவதுதான் உண்மையான கிறிஸ்தவம். ஆனால் இன்றைக்கு ஒரு ஆண்கள் சங்கமோ, பெண்கள் சங்கமோ, ஆலய நிர்வாக அதிகாரிகளாகவோ எதுவாக இருந்தாலும் முதலில் போதகரைப் பிரியப் படுத்தவே அல்லது போதகரிடம் மட்டுமே அன்பு செலுத்தினால் போதும் என பலர் நினைக்கின்றனர். பிறகு தன்னை ஆலயந்தின் அங்கத்தினர் அனைவருக்கும் போதகர் மூலம் பல வேளைகளில் பல நிலைகளில் அறிமுகப் படுத்த விரும்புகின்றனர். மிகவும் வேதனை என்னவென்றால் இதை அனேக போதகரும் விரும்புகின்றனர். ஒரு ஆலயத்தில் இரண்டு பெண்களுக்கு யார் “பெண்கள் சங்க நிர்வாகி” ஆகவேண்டும் என்பதில் சண்டை. இது கடைசியில் போதகரை எந்த விதத்திலும் பிரியப் படுத்தலாம் என்ற எண்ணத்திற்கு இருவரும் சென்றது தான் மிகவும் பரிதாபம். அன்பானவர்களே எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு செலுத்துவதே கிருஸ்தவ அன்பு. சமுதாயத்தில் உள்ள எல்லாரையும், குறிப்பாக எளியோரையும், திக்கற்றவர்களையும், விதவைகளையும், முதியவர்களையும் நேசிப்பதுதான் உண்மையான அன்பு.  ரோமர் 12:9 உங்கள் அன்பு  மாயமற்றதாயிருப்பதாக;  தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.
 

I பேதுரு 2 - 11. பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,  12. புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.   13. நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.  14. மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள்.  15. நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

 

கடைசியாக நான்காவதாக:   

பயப்படாதேயுங்கள் : 

“அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்” (உபா 7:21)

      மோசே இஸ்ரவேல் மக்களைப் பார்த்து, தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருப்பதினால் பயப்படாதேயுங்கள் என்று சொல்லுகிறார். கர்த்தர் நம்முடைய தேவனாக இருக்கும்பொழுது நாம் பயப்பட வேண்டிய அவசியம் என்ன? கர்த்தரைத் தங்கள் தெய்வமாகக் கொண்டிராத ஜனங்கள் எப்பொழுதும் பயந்தே வாழுபவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆனால் தேவனுடைய ஜனங்களுக்கு அவர் அவர்களோடே கூட இருந்து அவர்களை வழிநடத்துகிறவரும் மிகுந்த வல்லமையும் அதிபயங்கரமான தேவன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவேதான் பயப்படாதீர்கள் என்று சொல்லுகிறார்.

      “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” (சங்கீதம் 46:7) என்று வேதம் சொல்லுகிறது. தேவன் தம்முடைய ஜனங்களுக்கு மெய்யான அடைக்கலமாக இருக்கிறார். ஆகவே நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் தேவப்பிள்ளைகளுக்கு எதிரான மக்களுடைய ஆலோசனைகளும், திட்டங்களும் நிற்காது என்று சொல்லுகிறார். “ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்” (ஏசாயா 8:9-10). தேவன் நம் பட்சத்தில் இருக்கும்பொழுது நமக்கு எதிரிடையான காரியங்கள் இந்த உலகத்தில் நமக்கு எதுவுமே இருக்க முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் தேவன் சர்வத்தையும் ஆள்பவராகவும், அதிகாரம் கொண்டவராகவும் இருக்கிறார்.

 

ஆக இந்த நான்கு காரியங்களிலும் நாம் முழுவதுமாக ஈடுபடும்போது, 2023ல் இந்த நமது இந்தியா “கிருஸ்தவ” கலாசாரத்திற்கு மாறுவது உறுதி. மேலும் நமது இந்திய மக்கள் அனைவரும் “ஆத்தும இரட்சிப்பு”, அதாவது பாவத்திலிருந்து விடுதலை பெற்ற சந்தோசத்தை பெறவேண்டும்.  இதில் நமது பங்கு என்ன.?

கிருஸ்தவர்கள் இவற்றை நோக்கி இருக்கவேண்டும்? இவற்றை நோக்கி செல்ல வேண்டும்.